Showing posts with label Domesticity. Show all posts
Showing posts with label Domesticity. Show all posts

Wednesday, October 24, 2012

KFTD – 64: Cleanliness may be godly but this mess is heavenly!



அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

64    அறத்துப்பால், இல்லறவியல், புதல்வரைப் பெறுதல்
            Spiritual Matters, Domesticity, Children
     

Amizhthinum aatra inithetham makkal
Sirukai alaaviya koozh

Audio Link: https://sites.google.com/site/kftdaudios/home/arathu/64.mp3





“To parents, the porridge dirtied by their children is better even than the nectar that the Gods cherish”

In Hindu culture, producing children is not merely a requirement for furthering one’s genes.  A child is necessary for one to cross the path charted out for a soul after death.  In that context, this chapter would have fulfilled the requirements of structure and content, had it merely stressed the importance of children.  However, this chapter, puthalvarai peruthal, goes beyond that and focuses on the sheer joy toddlers give parents.

Children are dear to their parents.  Biology and  sociology combine to elevate every action of the tot to a acme of achievement in the eyes of otherwise stable parents.  Every couple thinks it invented sex and every parent thinks that they have had the bestest, most perfect child.  This is why actions otherwise mundane or even distasteful are imbued with the glow of perfection.  The bard, by talking about the pleasure kids give to their parents, elevates this chapter to a plane of true Truths.

In this couplet, Valluvar talks about how mere porridge, that lowliest, blandest of dishes, which has further been contaminated by a child’s fresh-from-play fingers tastes so heavenly merely because the kid in question belongs to one.  Any other kid and the dish will meet the trash can and the child roundly condemned as a ‘dirty, spoilt brat”.  This is an experience all parents have had and by using such a common example, he brings home the joy of ones’ own kids very powerfully.

In my limited knowledge, it is only in Indian literature that childhood is so celebrated – every facet of childhood has been an inspiration for a song or a story.  For a society so in love with its toddlers, it is such a pity that we systematically make such conformists of them not much later.

பெற்றோருக்கு, தம்முடைய குழந்தை கைவிட்டு அளாவி அசிங்கப்படுத்திய கூழ் தேவர்கள் விரும்பும் அமுதைவிட ருசியாக இருக்கும்” என்று அறுதியிட்டுக் கூறுகிறது குறள்.

குழந்தைகள் பெற்றோருக்கு தரும் இன்பத்திற்கு இணையே இல்லை.  “குழந்தை பெறுவதால் வம்சம் தழைக்கும்”, “பிற்காலத்தில் ஆதரவு இருக்கும்” என்று கூறியிருந்தாலும் திருக்குறளின் மேன்மைக்கு பங்கம் ஒன்றும் இருந்திருக்காது.  ஆனால் அவர்களால் வரும் இன்பத்தை குறித்து பாடுவதன் மூலம் வள்ளுவர் குழந்தைகளை ஏன் ‘செல்வம்’ என்று கூற வேண்டும் என்று அழகாய் உணர்த்துகிறார்.

காதலர்கள் எல்லோரும் கலவியை தாங்கள் மட்டும் கண்டுபிடித்ததாக எண்ணுவதும், பெற்றோர் தம் குழந்தைதான் உலகிற்ச்சிறந்த குழந்தை என்று எண்ணுவதும் இயற்கையே.  இந்த பாசம், தம் மகவு செய்தது என்ற ஒரே காரணத்திற்காக அருவருப்பை மீறி அசிங்கத்தை அழகென ருசிக்கும் படி செய்து விடுகிறது.   மாற்றான் குழந்தையாய் இருந்தால், அசிங்கம் மட்டுமே தெரியும்!

நான் அறிந்த வரையில் உலக இலக்கியத்தில் குழந்தைகளை இவ்வளவு கொண்டாடுவது இந்திய  இலக்கியம் மட்டுமே.  ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு பருவத்தையும் இவ்வளவு நுணுக்கமாய் இரசித்து அனுபவித்து எழுதுபவர்கள் நாமே!  இவ்வளவு இரசித்த குழந்தையை, சற்று நேரம் கழித்து அவ்வளவு கொடுமையாய் பள்ளியில் சிறகு ஒடிப்பதை நினைத்தால் தான் வருத்தம் வருகிறது.

73/1330

Tags: அறத்துப்பால், இல்லறவியல், புதல்வரைப் பெறுதல், Spiritual Matters, Domesticity, Children, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
Blog link: http://kftd.blogspot.in/

Friday, August 31, 2012

202: Why you should fear evil – தீயவை கண்டு ஏன் அஞ்சவேண்டும்?


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
     
202   அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்
            Spiritual Matters, Domesticity, Fearing Evil

Theeyavai theeya payathalaal theeyavai
Theeyinum anjapp padum.






“தீமை செய்வது தீமை செய்பவற்கே கெடுதல் விளைவிப்பதால் தீயவைகள் தீயை விட தீங்கிழைபவையாக அஞ்சப்பட வேண்டும்” என்று தீமை செய்வதில் உள்ள அபாயத்தை உணர்த்துகிறது குறள்.

நல்ல நெறி என்பது வாழ்கை நடத்த ஒரு அச்சாணி போன்றது.  நல்லதை விழைந்து, தீமையை ஒதுக்கினால் மட்டும் போதாது.  தீய செயல்களை செய்ய அஞ்ச வேண்டும் என்று உணர்த்தும் அதிகாரம் இது.

நான் பார்த்த வரையில் “ஏன் தீயவை செய்யக் கூடாது?” என்ற கேள்விக்கு பொதுவான பதில், “உம்மாச்சி கண்ணைக் குத்தும்!” என்றோ, “நீதிக்கு புறம்பானது” என்றோ, புற விளைவுகளை மையமாகக் கொண்டே இருக்கும்.  ஆனால், இந்த குறளில் உள்ள “தீமை உனக்கே தீமை விளைவிக்கும்” என்ற கருத்து தீமையின் தன்மையையை சுயநல ரீதியில் விளக்குகிறது. 

இந்த வாதத்திற்கு வீர்யம் அதிகம்!  தன்னலம் காத்தல் எல்லா உயிரினங்களுக்கும் உள்ள ஆதார உணர்ச்சி.  மனநிலை சரியில்லாத ஒருவர்கூட தன்னை காத்துக்கொள்ள தவறுவதில்லை.  அதை முன்னிலைப் படுத்துவதால் தீமையின் விளைவுகளுக்கு ஒரு அவசரம், நெருக்கம் வருகிறது.

தீமை செய்தால் எப்படி நமக்கே தீமை விளையும்?  இதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன – இப்பிறவியில் செய்யும் தீமை வரும் பிறவிகளில் நம்மை பிணிக்கும்; அதனால் நாம் வாழ்க்கைச் சுழலிலிருந்து மீள்வது கடினமாகிவிடும்.  இரண்டாவது விளக்கம், தீய வழியில் நடப்பதால் நல்ல இலாபம் கிடைப்பது போல் தோன்றினாலும், நீண்டகால நோக்கில் நிம்மதி போய், அஞ்சி அஞ்சி வாழ வேண்டி வரும்.  அந்தக் கொடுமையை காட்டிலும் தீய வழி நடக்காதிருப்பதே மேல்.  முந்தையதை விட பிந்தைய விளக்கதிற்கு தாக்கம் அதிகம் என்று எனக்கு தோன்றுகிறது.  இதற்கு எந்த மத சார்பான நம்பிக்கையும் தேவையில்லை.

அதனாலேயே எனக்கு இந்த குறள் பிடித்திருக்கிறது.

Evil deeds ultimately result in harming the doer and therefore need to be feared as more harmful than an uncontrolled fire” cautions this kural on the effects of doing evil.

A well developed sense of morality is essential to living life meaningfully in society.  It is not sufficient to know right from wrong.  This chapter, theevinaiyachcham, requires that one actively fear committing evil deeds.

Most catechisms answer the question “Why should I not commit evil, when the benefits are so obvious and immediate?” from an extraneous perspective. Typical answers are that “God will punish you”, “It is illegal.” Etc.   This kural, however, attempts to bring home the effect of the evil to the doer as a personal danger.  Self preservation is a basic drive in all living things.  By appealing to it, the kural brings immediacy and urgency to the argument.

How does evil harm the doer himself?  That question can be answered from two perspectives – one, it jeopardizes your chances of nirvana as your evil account goes into surplus.  This argument, of course, presupposes a belief in karma and a yearning for nirvana.

The other argument, requires a slightly long term outlook but does not require any special religious orientation.  When an evil deed is committed, the benefits are real but over time, it costs us our peace of mind.  The doer is worried about repercussions every waking minute and has to constantly strive to protect against them.  That loss of peace of mind makes it very costly to commit evil and hence it should be avoided.

I think kural’s attempt to make the consequences immediate & personal makes it powerful.

70/1330


Tags: அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம், Spiritual Matters, Domesticity, Fearing Evil, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

Tuesday, July 10, 2012

129: Wounding Words – வார்த்தைகளின் வலி

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

129   அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை
            Spirituality, Domesticity, Self Control

Theeyinaar suttapun ullaarum aaraathe
Naavinaar sutta vadu





தீயால் ஏற்படும் புண் மிகவும் வலித்தாலும், மனதளவில் ஆறிவிடும்.  ஆனால் பிறர் சொல்லும் கடும் சொல்லினால் ஏற்படும் காயம், உடலளவில் வலிக்காவிட்டாலும் மனதளவில் ஆறாமல் வலித்துக்கொண்டேயிருக்கும்” என்று எளிதாய் கூறுகிறது குறள்.

இல்லறவாழ்கையை வாழ ஜீவித்திருந்தால் போதும்.  ஆனால் அதை சிறப்பாக வாழ பல திறமைகளும், தகுதிகளும் வேண்டும்.  அப்படி ஒரு தகுதி தான் இந்த அதிகாரம் கூறும் “அடக்கமுடைமை”. 

இது புலன்களை அடக்கியாள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது.  இந்த அதிகாரத்தில் மற்ற குறள்கள் புலன்களை ஏன் அடக்கத் தெரிய வேண்டும் என்று கூறுகின்றன.  இந்தக் குறள், நாவை அடக்க முடியாவிட்டால் எதிரே இருப்பவர்களுக்கு ஏற்படும் விளைவை பற்றி விளக்குகிறது. 

ஒருவரை நாவால் திட்டியோ, தீஞ்சொல் உபயோகித்தோ புண்படுத்தி விட்டால், அது அவரை உறுத்திக்கொண்டே இருப்பதால் அவருடனான உறவையே கெடுக்கக்கூடும்.  எனேவே நாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.

இந்த குறளின் சொற்பிரயோகம் மிகவும் சுவையானது – தீயினாலானது புண்ணாலும் ஆறிவிடும்.  நாவிலாலனது வடுவில்லாவிடாலும் வலித்துக்கொண்டே இருக்கும்.  இதை குறிக்கவே ‘வடு’ எனும் வார்த்தையை உபயோகிக்கிறார், வள்ளுவர்.

The searing caused by a firebrand, though physically painful,  is forgotten mentally fairly quickly.  However, the mental hurt caused by an inappropriate, unthinking, cruel word can rankle & fester for a long time, even though there is no physical wound.” Classifies the kural.

To lead a domestic life does not require skills, it merely requires existence.  However, to live domestic life well – that takes skills, competence and qualifications.  Once such qualification is control self and the various senses and desires, the thesis of this chapter, adakkamudaimai.

For a successful and meaningful domestic life, one needs to be able to control all the five senses.  The rest of the kurals in this chapter talk about why such self control is required. This specific kural talks about the impact on the other person, if one were to lose control of one’s words.  By searing another with ill-considered, mean, cruel words a person alters his or her relationship with the other person for a long time as the hurt rankles in the other person.  The problem is worse if the other person is a subordinate.  Hence it is obvious that one has to have control on what one says at all times.

The kural also stands out for its irony – it calls the searing a wound but the insult a scar, belying the transitory nature of the former compared to the permanence of the latter.

52/1330


Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Spirituality, Domesticity, Self Control, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர்,  அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை

Blog link: http://kftd.blogspot.in/