Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, September 9, 2012

510: When Does Selection Stop? – தேர்வு முடிவது எப்போது?

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
     
510   பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்
            Spiritual Matters, Governance, Recruitment

Theraan thelivunth thelinthaankann aiyuravum
Theera idumbai tharum






“தகுதி இல்லாத ஒருவரை தேர்ந்தெடுத்தல், தீர ஆராய்ந்து ஒருவரை “தகுதியானவர்தான்” என்று நிர்ணயித்து தேர்ந்தெடுத்து அதன்பின் அவரை நம்பாமல் சந்தேகப்படுவது, இரண்டுமே தீராத கஷ்டத்தை தரும்” என்று தேர்வுக்கு ஒரு முடிவு வகுக்கிறது குறள்.

எந்த செயலையும் செவ்வனே செய்து முடிக்க ஒரு குழு தேவைப்படும்.  அந்தக்குழுவில் பல்வேறு விதமான ஆற்றல் கொண்டவர்களை தலைவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அவர்களை தேர்ந்தெடுக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய நியமங்களை விவரிக்கும் அதிகாரம் இது.

திருக்குறளில் பல்வேறு இடங்களில் இழையோடும் உணர்ச்சி இது – முடிவெடுத்தபின் குழம்பாமல் செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் வள்ளுவர்.  இந்த அதிகாரத்தில் எப்படி ஒருவரை சோதிப்பது, அப்படியெல்லாம் சோதனை செய்யும் போது நிதானத்தையும், நடுநிலையையும், ஆராய்ச்சி  நோக்கையும் கைவிடாது இருப்பதன் அவசியம் இவற்றையெல்லாம்  வலியுறுத்துகிறார் வள்ளுவர்.  இதன் மூலம் ஒரு வேலைக்கு ஆள் தேர்ந்தெடுப்பதில் உள்ள முயற்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். 

இப்படியெல்லாம்  சோதனை செய்து தேர்ந்தெடுக்கபட்டவர் தனது வேலையை செய்யும்போது அவர்மேல் முழு நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அவருக்கு உற்சாகம் குன்றும்.  அதனால் அவரது உற்பத்தி குறையும்.  இதனால் தலைவருக்கு அவர் மேல் நம்பிக்கை இன்னும் குறையும்.  அதனால் ... இந்த சுழற்சிக்கு முடிவே இல்லை.  இதை ஆங்கிலத்தில் “self fulfilling prophesy” என்று கூறுவார்கள்.   

சில வருடங்களுக்கு முன் ஒரு அமெரிக்க பள்ளியில் நடந்த ஆராய்ச்சியை இங்கே கூறுவது பொருந்தும்: ஆராய்ச்சியாளர் தான் இயற்றிய ஒரு சிறிய தேர்வின் மூலம் ஒரு வகுப்பில் எந்த குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள் என்று தன்னால் நிர்ணயிக்க முடியும் என்றார், இதை சோதிக்க பல வகுப்புகளில் தேர்வு நடத்தி தலா  இரண்டு மாணவர்களை “இவர்களே சிறப்பாக படிப்பார்கள்” என்று உறுதியாக கூறினார்.  என்ன அதிசயம்?  அவர் தேர்வு செய்த இரண்டு மாணவர்களே 90 சதவிகிததிற்கு மேலாக சிறப்பாக படித்தார்கள். வகுப்பில் முதன்மையாக வந்தார்கள். இது இந்த தேர்விற்கு முன் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருந்தாலும் சரியாகவே இருந்தது.   எப்படி பதினைந்து கேள்விகள் கொண்ட தேர்வு மூலம் இவ்வளவு சரியாக சிறப்பான மாணவர்களை அடையாளம் காண முடிந்தது என்று வகுப்பு ஆசிரியர்கள் கேட்ட போது உண்மை வெளியானது – எல்லா வகுப்புகளிலும் ஆராய்ச்சியாளர் மாணவர்களை கண்போன போக்கில் (random) தேர்ந்தெடுத்தார் அவரது தேர்வு ஒரு கண் துடைப்பே.  மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு ஆசிரியர்களின் எதிர்பார்ப்பே காரணம்! (http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect) அதேபோல், சந்தேக கண்கொண்டு பார்த்தால், நல்ல மாணவரும் சரியாக செயல்பட முடியாமல் போகும்.

வள்ளுவரின் குறளும் இதையே நிலைநிறுத்துகிறது.

Selecting an unqualified person and not fully trusting a qualified person who has been properly selected – both of these behaviours in a leader will lead to everlasting trouble” says this kural, identifying when the selection process should end.

In this chapter, therinthuthelithal, Valluvar outlines in some detail how to go about selecting people for an assignment.

The other couplets in this chapter talk about what are the considerations in selecting a person, what are the pitfalls, what to look for, what to discount and such like dimensions in the selection of a person.  This kural, the last, talks about the necessity for fully empowering the selected candidate, once he or she has cleared the intensive selection process.  (As an aside, I personally believe that the reversal of this attitude – selecting indiscriminately and weeding out people on ‘performance’ – is the root cause for most of the ills plaguing the Indian IT industry.  I also believe we are yet to see the worst effects of such a strategy.)

When the leader does not trust the person who is selected after vigorous qualification tests, it sets up a negative spiral. Since the candidate is, in a sense, gelded by the lack of trust, his output naturally suffers.  This reduced output reinforces the leader’s original mistrust leading to a vicious cycle.  This is what Valluvar refers to as “everlasting trouble”.

A few years ago, there was a very interesting experiment conducted by Rosenthal-Jacobson in US schools. They claimed to have refined a 15 item questionnaire that can predict the best performers in a class.  They were allowed to administer this questionnaire and they identified the students “most likely to perform well”.  Very surprisingly, over 90% of the identified students were the best or near the best of the students in their class, irrespective of their earlier performance. 

It turns out that the students most likely to perform well were selected randomly.  It was the teacher’s  expectations that the student will perform well that determined the student’s performance!  Similarly, it is not hard to think that a good student’s performance can be destroyed by the lack of trust of a student (For more information, please lookup Pygmalion Effect. http://en.wikipedia.org/wiki/Pygmalion_effect)

This kural too reiterates the same effect – if a leader thinks somebody will fail, they will certainly fail!

71/1330


Tags: பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல், Spiritual Matters, Governance, Recruitment, Daily, KFTD, kural, வள்ளுவர், குறள்,தினம்,தினமொரு குறள், Kural for the Day
                       
           
Blog link: http://kftd.blogspot.in/

Saturday, June 16, 2012

491: Setting the stage – களம் தேர்ந்தெடுத்தல்


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
491   பொருட்பால்- அரசியல்- இடனறிதல்
            Management- Politics– Setting the stage

Thodangarkka yevvinaiyum yellarkka mutrum
Idanganda pinnal lathu

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/491.mp3

ஒரு காரியத்தை வெற்றியுடன் முடிக்க பகைவரின் வலிவையும் தக்க காலத்தையும் அறிந்தால் போதாது.  எந்த களத்தில் எவ்வாறு வெற்றி கிட்டும் என்பதையும் நோக்க வேண்டும் என்று கூறும் அதிகாரம் இது.

“பகைவனை சூழ்ந்து அவனது நுழைவாயில்களை அடைத்து எந்த இடத்தில முற்றுகையிட்டால் வெற்றி கிட்டும் என்று முதலில் அடையாளம் காண வேண்டும். அதன் பின்னரே பகைவனை வெல்லும் பணியை தொடங்க வேண்டும்.  வெற்றியடையும் வரை எதிரியை இகழாதிருக்க வேண்டும்” என்ற பொருள் பட உள்ளது இந்தக் குறள்.

சற்றே விரிவாக நோக்கினால், எதிரியின் பலம் மழுங்கவும் நம் வலிவு ஓங்கவும் ஏதுவாய் இருக்கும் களத்தில் போர் நடக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.  ச்பார்டர்கள் (Spartans) பெர்சியர்களை தெர்மொபிலேவில்  (Thermopylae) அன்றி வேறு எந்த இடத்திலும் வென்றிருக்க முடியாது.  இந்நாளில் சந்தையியலில் (marketing) ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.

ஏழே வார்த்தைகளில் இத்தனை அர்த்தம் தொக்கி நிற்க வைக்க வள்ளுவனால் மட்டுமே முடியும்!

(முற்றுதல் = வளைத்தல்)

To succeed, it is not enough to understand an adversary’s strength or the right time to strike. It is equally important to choose the correct theatre of conflict to ensure success.  This chapter, idanarithal, talks specifically about selecting the right place to guarantee victory.

“Before beginning any a campaign, it is important to scout and select the specific location from where it would be easy to surround an enemy’s fortress and block all his access points. Once such a location is selected until victory is achieved, it is futile to bad mouth the enemy.  (After victory it is mean to badmouth him!)”

In a broader context, it means that it is important to select the battleground in such a way that the opponent’s strengths are blunted and one’s own strengths are utilized to their full potential.  The famous battle at Thermopylae could not have succeeded at any other location.

In a contemporary context, we are all aware of how important location is for marketing.

Loading so many shades of meaning in seven words is an art that Valluvar is a master at.

                                                                
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, politics, selecting the stage, success, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், இடனறிதல், வெற்றி

Blog link: http://kftd.blogspot.in/

30/1330


Friday, June 15, 2012

440: Reducing Enemies’ Leverage – எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
440   பொருட்பால்- அரசியல்- குற்றங்கடிதல்
            Management- Politics– Eliminating Faults

Kaathala kaathal ariyaamai uikirpin
Yethila yethilaar nool

Audio Link:  https://sites.google.com/site/kftdaudios/home/porut/440.mp3

ஒரு அரசனுக்கும் (அதிகாரிக்கும்) இருக்கும் குற்றங்களும்,  கெட்ட பழக்கங்களும் வெறுமே தனி நபர் பொறுத்தவை அல்ல.  அவைகளால் அவரின் நிர்வாகமும் அதன் பாதுகாப்பும் பாதிக்க படும். எனவே அவர் தன் குறைகளை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  இதை பற்றியே இந்த அதிகாரம் கூறுகிறது.

குறள் கூறுவதாவது:

அரசனுக்கு குறைகள் இல்லாதது நல்லது.  அப்படி இருப்பின், அவர் தனக்கு இன்பம் தருவது எது என்பதையும், அதை நுகருவதையும் பிறர் அறியாவண்ணம் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.  அப்படி செய்தால், அவருடைய எதிரிகள் சூழ்ச்சி செய்ய தேவையான பிடிமானங்கள் குறைக்க படும்.

வள்ளுவரின் மொழி ஆளுமை மிக அழகாக இந்த செய்யுளில் வெளிவருகிறது.  மேலும் குறைகளின் தவிர்க்க முடியாத தன்மையும், பகைவர்களுக்கு அவை கொடுக்கும் சந்தர்பத்தையும், அவற்றின் தாக்கத்தை குறைக்கும் வழியை கூறுவது அவரின் நுண்ணறிவை காட்டுகிறது.

(நூல் = சூழ்ச்சி;  ஏதிலார் = பகைவர் )

For people in authority, their foibles are not just a matter of personal preference.  They have the ability to impact their authority and their organizations security.  All espionage is based on this.  Therefore it is imperative for senior functionaries to minimize their shortcomings.  This chapter, kutrangkadithal, is about why it is necessary to actively eradicate one’s imperfections.

In this, the last kural in the chapter, Valluvar recognizes the inevitability of having vices.  Therefore he counsels “A king needs to prevent others from knowing on what gives him pleasure.  Further he should have the ability to indulge in his pet vices in secrecy.  If he is able to do this, he will reduce the security holes available to his enemies to exploit his weaknesses and thereby defeat their plots.”

The practical approach to both the recognition inescapability of vices and the solution to enjoy them with consequences minimized demonstrate his grasp of worldly knowledge.  In Tamil, the structure of the couplet also reveals his mastery over the language.

Image courtesy: http://sosueme.ie/gossip/secrets-are-they-your-love-or-hate/

Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, Management, politics, minimizing faults, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்

Blog link: http://kftd.blogspot.in/

29/1330

Sunday, June 3, 2012

KFTD – 490: Patience and timing



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

490 பொருட்பால்- அரசியல்- காலமறிதல்

kokkokka koombum paruvathu matrathan
kuthokka seertha idathu




எந்த ஒரு வேலையையும் சிறப்பாக முடிக்க அது தகையும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும்.  அது தகையும் நேரத்தை கணிப்பதே காலமறிதல். 
இந்தக் கருத்தை வள்ளுவர் ஒரு மிகச் சிறந்த உவமை மூலமாக நமக்கு உணர்த்துகிறார். ஒரு கொக்கை மீனை பிடிக்க அமைதியாக, சலனமின்றி, பொறுமையாக உயிரில்லாதது போல் காத்துக்கொண்டிருக்கும்.  ஏமாந்த மீன் அருகில் வந்தாலோ, அது தப்புமுன் குத்தி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும்.  அது போலவே, தகையும் நேரம் வரும் வரை பொறுமையை காத்திருந்து விட்டு, கைகூடும் நேரம் வந்ததும் உடனே, துரிதமாக செயலாற்றி வெற்றி கொள்ள வேண்டும்.
விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் டைமிங் (timing) மிக முக்கியம்.

To accomplish anything, it is important not only to have the requisite skills and competence but also the ability to assess the right time for the undertaking to be a success.  This sense of timing is kaalamarithal, the name of this chapter.

Valluvar brings out the importance of timing by means of a metaphor: An egret, when out fishing, waits patiently, soundlessly, motionlessly for the fish to come near.  This phase of low profile, prepared waiting is the key to its success when a fish does come nigh, not realizing the danger.  When that moment comes, the egret spears the fish in a flash, with no hesitation and with alacrity. 
These dual qualities, waiting for the opportune moment patiently and acting decisively, without hesitation when the waited for opportunity presents itself, will ensure success every time.

Timing is essential not just in sports but in life too.

17/1330

Thursday, May 31, 2012

KFTD – 619: Perseverance Pays


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
619       பொருட்பால்- அரசியல்- ஆள்வினையுடைமை

deivathAn Aga theninum muyarchithan
meivaruthak kooli tharum




 ஆள்வினையுடைமை என்னும் அதிகாரம் விடாது முயற்சி செய்வதை பற்றி கூறுகிறதுஓரு வேலையை தெய்வமே தன்னால் முடியாது என்று கைவிட்ட பிறகும் ஒருவன் முனைப்புடன் உடல் வருந்த வேலை செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும்இந்த பொருளுரை இந்த குறள் பற்றி என்னுடைய அபிப்பிராயம்.
பரிமேலழகர் இதை இரண்டு விதமாக ஆராய்கிறார்தெய்வத்தை மட்டும் நம்பி ஒரு வேலையை ஆரம்பிக்காமல் தன் முயற்சி பயன் தரும்மென்று நம்பி செய்ய வேண்டும் என்று ஒரு விளக்கம்மற்றொன்று,  தெய்வம் கைவிட்டாலும், நாம் இட்ட முயற்சி அதன் வருத்தத்தின் அளவேனும் கூலி தரும், வீணாய் போகாது.
இவற்றில், விடா முயற்சி செய்ய அதிகம் ஊக்குவிப்பது என்னுடைய விளக்கமே என்பது எனது தாழ்மையான எண்ணம்.

The importance of Perseverance (aalvinamyudaimai) in ensuring success in any endeavor cannot be understated.  This is the focus of this chapter.

The kural says, in my opinion, that if even God has given up an undertaking as “Impossible”, undying, sinew straining effort and perseverance will definitely make success possible. 

The more classical interpretations give either of the following opinions – One,do not start a new effort believing that God will make it a success.  Instead, it is better to believe that our own efforts will bring victory nigh. 
The other explanation says that even if an attempt fails because God has given up, you will most certainly get at least the rewards of the effort that you put into it.

Of the three versions, I personally believe that first encourages perseverance the best.

14/1330


Wednesday, May 30, 2012

KFTD - 605: Markers for Failure



நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

605 பொருட்பால்- அரசியல்- மடியின்மை

nedunIr maravi madithuyil nAngum
kedunIrAr kAmak kalan





‘மடி’ என்றால் ‘சோம்பல்’ என்று அர்த்தம். இந்த அதிகாரத்தில் ஒரு அரசனுக்கு ஊக்கம் எவ்வளவு முக்கியம் என்று வள்ளுவர் கூறுகிறார்.  துரிதமாக செய்ய வேண்டிய வேலையை தாமதமாக செய்தல், மறதி, சோம்பல், தேவைக்கு அதிகமான தூக்கம் இவை எல்லாம் கெட்டு போக தயாராய் இருப்பவன் வாழ்கை கடலை கடக்க நாடி ஏறும் சிறு படகுகள் ஆகும்.  இந்த நான்கு பண்புகளும் தாற்காலிகமாக இன்பம் தந்தாலும் பின் நாளில் நிச்சயமாக துன்பத்தில் ஆழ்த்தும். 
இங்கு ‘காம கலன்’ என்பது ஒரு உவமைக் குறிப்பு:  “ஏரியில் போகும் ஓடத்தை நம்பி கடலை கடக்க முயல்வதை போல” என்று அர்த்தம் கொள்ளலாம்.

‘Madi’ means lethargy in Tamil.  Therefore its opposite, madiyinmai, is best denoted by the word energy or enthusiasm.  This chapter talks about the importance of being energetic is to a king. 

Valluvar identifies four markers for a person destined to be unsuccessful: procrastination, forgetfulness, lethargy and sleepiness. He says that these are like siren calls to a person who is going to fail.  Like the fabled Sirens, the short-term pleasure from these activities seduces those who seek them and makes them willingly travel towards long term failure. 

Metaphorically, he likens yielding to these siren calls to attempting to cross the ocean on rickety rafts – an activity doomed to failure before it starts.

13/1330